'நயன்தாரா தேவை இல்லை'

'நயன்தாரா தேவை இல்லை'

1 mins read
72c904d1-fa04-49db-a7ca-fba4f7ad7d2b
-

தாம் இயக்­கிய 'குடைக்­குள் மழை' என்ற படத்­தில் நயன்­தா­ராவை நடிக்க வைக்க விரும்­பி­ய­தா­க­வும் பிறகு அவர் வேண்­டாம் என முடிவு செய்­த­தா­க­வும் நடி­கர் பார்த்­தி­பன் கூறி­யுள்­ளார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு நிகழ்ந்த சம்­ப­வங்­க­ளை­யும்்்் ஒரு பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அந்­தப் படத்­தில் நடிக்க வைக்க அவரை ஒரு­நாள் காலை எட்டு மணிக்கு வரச் சொன்­னேன். ஆனால், அன்று அவர் வர­வில்லை.

"பிறகு தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு 'சார் என்­னால் நேற்று வர முடி­ய­வில்லை. இன்று­தான் பேருந்­தில் சென்­னைக்கு கிளம்­பு­கி­றேன். நாளை காலை கண்­டிப்­பாக வந்­து­வி­டு­கி­றேன்' என சொன்­னார்.

"கோபத்­தில் இருந்த நான் 'இல்லை வரவேண்­டாம்' என சொல்­லி­விட்­டேன். எனக்கு அப்­ப­டித்­தான் கோபம் வரும். இப்­போது அவர் 'லேடி சூப்­பர் ஸ்டார்' ஆகி­விட்­டார்," என்று பார்த்­தி­பன் தெரி­வித்­துள்­ளார்.

நயன்­தாரா இப்­போது ஷாருக்­கான் ஜோடி­யாக 'ஜவான்' படத்­தி­லும், தமி­ழில் தனது 75ஆவது படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் அவ­ரைப் பற்றி இயக்குநர் பார்த்­தி­பன் பேட்­டி­யில் குறிப்­பிட்­டி­ருப்­பது தமிழ்த் திரையுலகில் விவாதப் பொரு­ளாகி உள்­ளது.