தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கி நாட்டுக்குச் சென்றுள்ளார் சமந்தா. அங்கு படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் வெளியே சுற்றித் திரிகிறார்களாம்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்தகைய ஒரு பதிவில், விஜய் தேவரகொண்டாவை அவர் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
"நீங்கள் பெற்றுள்ள வெற்றி, தோல்வி இரண்டையும் பார்த்துள்ளேன். உங்களுடைய ஏற்ற இறக்கங்களைக் கவனித்துள்ளேன்.
"சில நண்பர்கள் அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள். அவர்களில் நீங்களும் ஒருவர்," என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
ஏற்கெனவே இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியுள்ள நிலையில், சமந்தாவின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

