தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஹிப் ஹாப்' ஆதி: முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்

2 mins read
363495a8-7998-4b0a-baa5-da4fec061a7f
-

ரசி­கர்­களை முகம் சுளிக்க வைக்­கும் காட்­சி­களில் நடிப்­பதை அறவே விரும்­பு­வ­தில்லை என்­கிறார் நடி­கர் 'ஹிப்­ ஹாப்' தமிழா ஆதி. இவ­ரது நடிப்­பில் வெளி­யாகி உள்ள புதுப் படம் 'வீரன்'.

சத்­ய­ஜோதி பிலிம்ஸ் தயா­ரித்­துள்­ளது. 'மர­கத நாண­யம்' படப் புகழ் ஏ.ஆர்.கே.சர­வன் இயக்­கி­உள்­ளார்.

"சத்­ய­ஜோதி நிறு­வ­னத்­து­டன் நான் இணைந்­துள்ள மூன்­றா­வது படம் இது. மற்ற இரண்டு படங்­களைப் போலவே இது­வும் வெற்றி அடை­யும் என்ற நம்­பிக்­கை­யில்­தான் நடித்­துள்­ளேன்.

"அடுத்து இயக்­கு­நர் சரவன் பற்றி குறிப்­பிட வேண்­டும். 'இன்று நேற்று நாளை' படத்­துக்கு இசைய­மைத்த போது­தான் அவர் எனக்கு அறி­மு­க­மா­னார். மிக­வும் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­ப­டக்­கூடிய இயக்­கு­நர்.

"நாம் பார்க்­கும் வேலை­களைக் கடந்து சிலர் மட்­டுமே நம் தனிப்­பட்ட வாழ்க்­கை­யி­லும் நண்­பர்­க­ளாக இருப்­பார்­கள். அவர்­களில் ஒரு­வர் சர­வன். இந்­தப் புதிய படத்­துக்­காக நாங்­கள் ஆறு மாதங்­கள் இணைந்து பய­ணித்­தோம். முழுப் பய­ணத்­தி­லும் அவர் என்­னு­டன் இருந்­த­தால் நெருக்­க­மான நண்­பர்­க­ளா­கி­விட்டோம்," என்­கி­றார் ஆதி.

இது­வரை தாம் நடித்த படங்­களி­லேயே 'வீரன்' படத்­தில்­தான் அதிக எண்­ணிக்­கை­யி­லான சண்டைக் காட்­சி­கள் நிறைந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், நடி­கர் வினய் இப்­ப­டத்­தில் வில்­ல­னாக நடித்­தி­ருப்­பது பெரும் பலம் என்கிறார்.

"வினய் அண்­ணன் இந்­தப் படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தால் பிரம்­மாண்ட படைப்­பாக மாறி­விட்­டது. அவ­ருக்கு என் மீது பாசம் அதி­கம்.

"புது திற­மை­சா­லி­களை ஒவ்­வொரு படத்­தி­லும் அறி­மு­கப்­படுத்­து­வதைப் பாக்­கி­ய­மா­காக கரு­து­கி­றேன். அந்த வகை­யில் இந்த 'வீரன்' படத்­தி­லும் சில­ரைப் பார்க்க முடி­யும்.

"இந்தப் படத்­தில் நான் நடித்­ததை­விட கற்­றுக்­கொண்ட விஷயங்­கள் அதி­கம் உள்­ளன. மண் சார்ந்த ஒரு 'சூப்­பர் ஹீரோ' கதா­பாத்­தி­ரம் என்­ப­தால் நடை, உடை, பாவனை என அனைத்­தி­லும் கூடு­தல் கவ­னம் செலுத்தி உள்­ளோம். அனைத்து தொழில்­நுட்பக்கலை­ஞர்­களும் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­னர். என்­ன­தான் சூப்­பர் மேன், அயர்ன் மேன் என வந்­தா­லும் நம் மண் சார்ந்த 'சூப்­பர் மேன்'கள் என்­றால் தனிச் சிறப்­பு­தான். அவர்­களை எப்­போதும் போற்ற வேண்­டும்.

இப்­போது, தமி­ழ­கத்­தில் பள்ளி­க­ளைத் திறப்­பது தள்­ளிப் போயி­ருப்­ப­தால் குழந்­தை­க­ளோடு குடும்­ப­மாகத் திரை­ய­ரங்­கம் சென்று இப்­ப­டத்தைக் காண­லாம் என்­றும் அடுத்த பத்து ஆண்­டு­களுக்­குப் பிற­கும் குழந்­தை­களின் நினை­வில் நிற்­கக்­கூ­டிய படைப்­பாக 'வீரன்' உரு­வாகி உள்­ளது என்­றும் சொல்­கி­றார் ஆதி.

"படத்­தில் முகம் சுளிக்க வைக்­கும் காட்சி ஒன்­று­கூட கிடை­யாது. இசை­யி­லும் பல புதிய விஷ­யங்­க­ளைப் பரி­சோதித்துள்ளோம். மூன்று மாதங்­களில் மொத்த படத்­தை­யும் முடித்து­விட்­டார் இயக்­கு­நர். எனி­னும் அதற்கு முன்­பாக ஏறக்­குறைய ஆறு மாத காலம் எனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக குதி­ரை­யேற்­றப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டேன்.

"மேலும், 'சிங்­கிள் பசங்க', 'கேரளா டான்ஸ்' என என்­னு­டன் தொடக்­கத்­தில் இருந்தே இணைந்து பய­ணித்து வரும் சந்­தோஷ் மாஸ்­டர்­தான் இதற்­கும் நட­னம் அமைத்தார். கதைக்கு மண்­சார்ந்த நடன அசை­வு­கள் பெரி­தும் கைகொகடுத்தன," என்­கி­றார் ஆதி.