தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'எதையும் மறப்பதுதான் நல்லது'

1 mins read
6c700289-3e94-418b-9046-e385b8aa14cd
-

மனதை வேத­னைப்­ப­டுத்­தக் கூடியவை அல்­லது மன­துக்­குப் பிடிக்­கா­தவை என எது­வாக இருந்­தா­லும் முடிந்த அள­வுக்கு அவற்றை விரை­வாக மறந்­து­விட வேண்­டும் என்­கி­றார் நடிகை அனு­பமா பர­மேஸ்­வ­ரன்.

தாம் எப்­போ­துமே நேர்­மை­யைக் கடைப்­பி­டிக்க விரும்­பு­வதாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எனக்கு ஏதா­வது பிடிக்­க­வில்லை என்­றால் அதை உட­னடி­யாக வெளிப்­ப­டுத்­தி­வி­டு­வேன். ஒரு­வ­ரது முகத்தை நேருக்கு நேரா­கப் பார்த்து பேசும் துணிச்­சல் எனக்கு உண்டு.

"வாழ்க்­கைப் பய­ணம் என்­பது குறு­கிய காலத்­தைக் கொண்­டது. குறிப்­பிட்ட காலத்­துக்­குப் பிறகு இந்த உல­கத்­தில் நாம் இருக்க மாட்­டோம். அந்த நாள் எப்­போது வரும் என்­ப­து­கூட யாருக்­கும் தெரி­யாது," என தத்­து­வார்த்­த­மாகப் பேசு­கி­றார் அபர்ணா.

வாழும் நாள்­களில் தேவை­யற்ற நெருக்­க­டிக்­குள் யாரும் சிக்­கி­வி­டக்­கூ­டாது என்று அறி வுறுத்­து­ப­வர், வேத­னையை மன­தில் அடைத்­துக்­கொண்டு மனித ஆற்­றலை ஏன் வீண­டிக்க வேண்­டும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்.

"கண்காணிப்புக் கருவிகளில் உள்ள காட்சிகள் ஒரு மாதத்திற் குப் பிறகு தன்னால் எப்படி அழிந்துவிடுமோ, அதேபோல் நம் மனதை வைத்துக்கொள்ள வேண்டும்," என்பதே அனுபமா வின் அறிவுரை.