மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி பாத்திரத்தில் நடித்து ஏராள ரசிகர்களின் உள்ளம் கொள்ளைகொண்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியான இவர், 50 வயதைத் தொடப்போகும் நிலையிலும் தனது அழகையும் ஆரோக்கியத்தையும் பேணி வருகிறார்.
“காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பேன். கடலைமாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகம் கழுவுவேன். இதனை மாதம் ஒருமுறை பின்பற்றுவேன்.
“சந்தன எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை முகத்தில் தடவி மெல்ல மசாஜ் செய்வேன். கூடுதலாக, ஆரோக்கிய உணவையும் சருமம் பள பளப்பாக இருக்க நிறைய தண்ணீரும் குடிப்பேன்,” எனக் கூறியுள்ளார்.