ரஜினி அளித்த பரிசு: உற்சாகத்தில் தமன்னா

1 mins read
044fc03f-16d3-4b74-801e-78f2e91cf201
-

ரஜி­னி­காந்த் அண்­மை­யில் தமக்கு சிறப்­புப் பரிசு ஒன்றை அளித்­த­தாக பார்ப்­ப­வர்­க­ளி­டம் எல்­லாம் பூரிப்­பு­டன் சொல்­கி­றார் தமன்னா.

வேறு ஒன்­று­மில்லை, சில நாள்­க­ளுக்கு முன்பு 'ஜெயி­லர்' படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ற­போது, தமக்கு குறு­கி­ய­கால ஓய்வு கிடைத்­தி­ருப்­ப­தாக ரஜி­னி­யி­டம் கூறி­னா­ராம்.

அதைக்­கேட்ட ரஜினி, உட னடி­யாக தன்­னி­டம் இருந்த ஆன்­மீக நூலை எடுத்­துக் கொடுத்­தா­ராம்.

"அது ஆன்­மீகப் பய­ணத்தை எவ்­வாறு மேற்­கொள்ள வேண்­டும் என்­பதை விவ­ரிக்­கும் அற்பு­த­மான நூல். அதை தனது பரி­சா­கக் கரு­து­மாறு ரஜினி கூறி­னார். எனக்கு இது­வரை கிடைத்­துள்ள பரி­சு­களில் அந்­நூல் ஆகச்­சி­றந்­தது," என்­கி­றார் தமன்னா.

நல்ல தக­வல்­க­ளைக் கொண்ட அந்த ஆன்­மீக நூலை பத்­தி­ர­மா­க பாது­காக்கப் போவ­தாக அவர் கூறி­யுள்­ளார். ரஜி­னிக்கு நன்­றி­யும் தெரி­வித்­துள்­ளார்.