மலையாளப் படங்களைத் தவிர்க்கும் நாயகி

1 mins read
23de7654-72a2-4335-a479-e29f3320ba57
-

மலை­யா­ளப் படங்­களில் நடிப்­பதை தவிர்க்­கப் போவ­தாக தெரி­வித்­துள்­ளார் நடிகை ஐஸ்­வர்யா ராஜேஷ்.

மலை­யா­ளத்­தில் வச­னங்­களைப் புரிந்­து­கொண்டு நடிப்­பது சிர­ம­மாக உள்­ளது என்­றும் தமது முடி­வுக்கு இது­தான் கார­ணம் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் எப்­போ­தும் எனக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­காக அதி­கம் மெனக்­கெ­டு­வேன். மலை­யா­ளப் படங்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

"எனி­னும் மலை­யா­ளத்­தில் பேசு­வ­தற்­கும் அம்­மொழி வச னங்­க­ளைப் புரிந்துகொள்­வ­தற்­கும் சிர­ம­மாக உள்­ளது. அத­னால் மலை­யா­ளப் படங்­களில் நடித்து முடிக்க கால­தா­ம­தம் ஆகிறது. என­வே­தான் அம்­மொ­ழியை நன்கு கற்­றுத்தேறும் வரை மலை­யா­ளப் படங்­களில் நடிக்க வேண்­டாம் என முடி­வெ­டுத்­துள்­ளேன்.

"மலை­யா­ளத்­தில் தர­மான படைப்­பு­கள் தொடர்ந்து உரு­வா­கிறது என்­பதை யாரா­லும் மறுக்க இய­லாது. மலை­யாள மொழி­யில் நடிப்­பதை பெரி­தும் விரும்­பு­கிறேன்," என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

'ஜோமோண்டே சுவி­சே­ஷங்­கள்' என்ற மலை­யா­ளப் படத்­தில் துல்ஹர் சல்­மா­னு­டன் இணைந்து நடித்த இவர், பின்னர் அம்­மொ­ழி­யில் மூன்று படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

மேலும் பல வாய்ப்­பு­கள் தேடி வரும் நிலை­யில், ஐஸ்­வர்யா எடுத்­துள்ள திடீர் முடிவு ஏமாற்­றம் அளிப்­ப­தா­க­வும் எனி­னும் அம்­மு­டிவை மதிப்­ப­தா­க­வும் மலை­யா­ளத் திரை­யு­ல­கத்­தி­னர் கூறி உள்­ள­னர்.