தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கறார் காட்டும் கோடம்பாக்க கதாநாயகிகள்

4 mins read
4e7915cf-c883-410f-adfe-9f4d288bbc18
-
multi-img1 of 4

திரை­யு­ல­கில் எப்­போ­துமே நீடித்­தி­ருக்­கும் பிரச்­சினை என்­றால் அது நடி­கர், நடி­கை­ய­ரின் சம்­பள விவ­கா­ரம்­தான்.

முன்­பெல்­லாம் கதா­நா­ய­கர்­கள் தங்­க­ளு­டைய ஊதி­யத்தை உயர்த்­தி­விட்­ட­தாக அவ்­வப்­போது புகார்­கள் எழும். இப்­போது கதா­நா­ய­கி­களும் அந்­தப் பட்­டி­ய­லில் இணைந்­து­விட்­ட­தாக கோடம்­பாக்­கத்து விவ­ரப்புள்­ளி­கள் கூறு­கின்­ற­ன.

"கதா­நா­ய­கி­களில் நயன்­தாரா 10 கோடி ரூபாய் சம்­ப­ளம் கேட்­கி­றார். கீர்த்தி சுரேஷ், திரிஷா, சமந்தா என பெரும்­பா­லான நாயகி­கள் சம்­ப­ளத்தை அதி­க­ரித்­துள்­ள­னர்.

திருமணம் செய்­து­கொண்ட பிற­கும் திரைத்­து­றை­யில் நீடிக்­கும் மூத்த கதா­நா­ய­கி­க­ளும்­கூட அதிக சம்­ப­ளம் கேட்­கி­றார்­கள். இத­னால் தயா­ரிப்­பா­ளர்­கள் செய்­வ­த­றி­யா­மல் திகைப்­பில் உள்­ள­னர்," என்­கி­றார் தமிழ்த் திரை­யு­லக மக்­கள் தொடர்பாளர்­களில் ஒரு­வர்.

கதா­நா­ய­கர்­கள் ஒன்­றி­ரண்டு வெற்­றிப் படங்­களில் நடித்த கையோடு கோடிக்­கணக்­கில் சம்­ப­ளத்தை உயர்த்­து­வது வழக்­கம்­தான். ஆனால் கதா­நா­ய­கி­களும் அதே பாதை­யில் செல்ல என்ன கார­ணம்?

இந்­தக் கேள்­விக்­குப் பெரும்­பா­லான மக்­கள் தொடர்­பா­ளர்­கள், திரை­யு­ல­கச் செய்­தி­யா­ளர்­கள் அளிக்­கும் விளக்­கம் ஒரே மாதி­ரி­யா­கத்­தான் உள்­ளது.

"முன்­பெல்­லாம் கதா­நா­ய­கர்­க­ளுக்கு உள்ள சந்தை மதிப்பை பொறுத்­துத்­தான் படங்­க­ளின் வியா­பா­ரம் அமை­யும். அத­னால் ரஜினி, கமல், விஜய் அஜீத், தனுஷ், சிம்பு என்று அந்­தந்த காலகட்­டங்­க­ளுக்கு ஏற்ப தொழில் போட்டி இருந்­தது.

"ஆகக் கடை­சி­யாக சிவ­கார்த்­தி­கே­யன், விஜய் சேது­பதி இடையே போட்டி நில­வுவதாகக் கூறப்­பட்­டது. அத­னால் போட்டி ரீதி­யில் அவர்­க­ளின் படங்­க­ளுக்­கான மதிப்பு தீர்மானிக்­கப்­பட்­டது.

"இந்­நி­லை­யில் கதா­நா­ய­கி­களை முன்னிலைப்­ப­டுத்­தும் படங்­கள் வரத்­தொடங்­கி­ய­தும் நிலைமை மாறி­விட்­டது. நயன்­தாராதான் முதன்­மு­த­லாக இத்­த­கைய படங்­களில் கூடுதல் கவ­னம் செலுத்­தி­னார்.

அவர் தனி நாய­கி­யாக நடித்த படங்­களின் வசூல் நன்­றாக இருப்­ப­தாக திரை­யு­ல­கில் தக­வல் பரவி­ய­தும் திரிஷா, ஜோதிகா போன்ற மூத்த நாய­கி­களும் அந்த வழி­யைப் பின்பற்றத் தொடங்­கி­னர்.

"யார் செய்த புண்­ணி­யமோ, ரசி­கர்­களின் கடைக்­கண் பார்வை இந்த நாயகி­கள் மீது பதிந்­தது. எனவே தனி­நா­ய­கி­களின் படங்­கள் வெற்­றி­ பெ­றத் தொடங்கின.

"இதை­யெல்­லாம் உற்­றுக் கவ­னித்த கீர்த்தி சுரேஷ், ஐஸ்­வர்யா ராஜேஷ் உள்­ளிட்­டோ­ரும் கதா­நா­ய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்களில் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர்.

"இவர்­கள் கேட்­கும் சம்­ப­ளம் வாய்­பிளக்க வைத்­தா­லும் சில தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் எப்­பா­டு­பட்­டா­வது சம்­ப­ளத்­தைக் கொடுக்க முன்­வ­ரு­கி­றார்­கள்," என்­கி­றார் தமிழ்த் திரையு­ல­கின் மூத்த செய்­தி­யா­ளர்­களில் ஒரு­வர்.

தற்­போது 'ஜவான்' இந்­திப் படத்­தி­லும் 'இறை­வன்', 'டெஸ்ட்' உள்­ளிட்ட நான்கு தமிழ்ப் படங்­களி­லும் நடித்து வரு­கி­றார் நயன்­தாரா.

இவ­ருக்கு தமிழ், தெலுங்­கி­லும் வர­வேற்புள்­ள­தாக ரூ.7 கோடி­யாக இருந்த சம்­ப­ளத்தை பத்து கோடி ரூபா­யாக உயர்த்தி ­உள்­ள­தா­கத் தக­வல்.

சமந்­தா­வுக்­கும் தென்­னிந்­திய மொழி­களில் தொடர்ந்து வாய்ப்பு­கள் அமை­கின்­றன. போதாத குறைக்கு இந்தி, ஹாலி­வுட் பட வாய்ப்­பு­களும் கிடைப்­ப­தால், அதிக­பட்­ச­மாக இது­வரை ரூ.4 கோடி ஊதி­யம் கேட்ட அவர், இப்­போது ஏழு விரல்­க­ளைக் காட்டு­கி­றா­ராம். அதா­வது சமந்தா­வின் சம்­ப­ளம் ரூ.7 கோடி.

கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக தமிழ் சினி­மா­வில் வெற்றி வலம் வரும் திரிஷா 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­துக்கு முன்பு வரை ரூ.2 கோடி வாங்கி வந்­த­தா­க­வும் இப்­போது ஒரு படத்துக்கு ரூ.4 கோடி கேட்­ப­தா­க­வும் தகவல்.

இது­வரை படங்­க­ளின் பட்ஜெட்­டுக்கு ஏற்ற மாதிரி ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று சம்­பளம் வாங்­கிய காஜல் அகர்­வால் இப்­போது ரூ.4 கோடி கேட்­கி­றார்.

முன்பு ரூ.2 கோடி வாங்கி வந்த ரகுல் ­பி­ரீத் சிங் தற்­போது ரூ.3 கோடி கேட்­ப­தாகத் தக­வல்.

கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி, ஐஸ்­வர்யா ராஜேஷ் ரூ.2 கோடி, தமன்னா ரூ.4 கோடி சம்­ப­ளம் கேட்­கும் நிலை­யில், மூத்த நடிகை­யான அனுஷ்கா ரூ.5 கோடி சம்­ப­ளம் கேட்­ப­தாக கோடம்­பாக்­கத்­தில் கிசு­கி­சுக்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­ளப் பட்­டி­ய­லில் ராஷ்­மிகா மந்­தனா புயல் வேகத்­தில் உய­ரச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றார்.

'புஷ்பா' பட வெளி­யீட்­டுக்கு முன்பு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி சம்­ப­ளம் பெற்று வந்த அவர், இப்­போது ஆறு கோடி ரூபாய் பெறு­கி­றார்.

இவர்­கள் அனை­வ­ரை­யும்­விட 'சமர்த்து நாயகி' என்று பெய­ரெடுத்­துள்­ளார் சாய் பல்­லவி.

வெற்­றிப் படங்­களில் நடித்தபிற­கும்­கூட ரூ.1 கோடி கொடுத்­தால் போதும் என்று சொல்­வ­தால் இந்த நல்ல பெயர் கிடைத்­துள்­ளது. அடுத்து நடிக்க உள்ள படத்­துக்­காக அவர் ரூ.2 கோடி சம்­பளம் கேட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

"கடந்த வாரம் குறை­வான சம்­ப­ளம் கேட்ட ஒரு கதா­நா­யகி இப்­போது இரு­ம­டங்கு சம்­ப­ளம் கேட்­ப­தா­கச் சொல்­வதை நம்ப முடி­ய­வில்­லையே என உங்­களில் சிலர் கேட்­க­லாம்.

"ஆனால் அது வேறு காலம், இது வேறு காலம்," என்று சொல்­லிச் சிரிக்­கி­றார் அந்த மூத்த செய்­தி­யா­ளர்.

பூஜா ஹெக்டே உள்­ளிட்ட பிற மொழி நாய­கி­கள் கேட்­கும் சம்பளம் கிடைத்­தால் மட்­டுமே தமி­ழில் நடிக்க ஒப்­புக்கொள்­கின்­ற­னர்.

மேலும், கிரித்தி ஷெட்டி உள்­ளிட்ட இளம் நாய­கி­களும்கூட தொடக்­கத்­தி­லேயே அதிக சம்­பளம் கேட்­ப­தா­கத் தக­வல்.

"அவர்­களில் சிலர் படத்­துக்­கான விளம்­பர நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தற்­கும்கூட தனி­யாக தொகை கேட்­ப­தாக ஒரு புகார் உள்­ளது. எனி­னும் திற­மை­சா­லி­களை மட்­டுமே ரசி­கர்­கள் அங்கீ­கரிக்­கின்­ற­னர்," என்கிறார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

காஜல் அகர்வால்.

பூஜா ஹெக்டே.

ராஷ்மிகா மந்தனா.

சாய்

பல்லவி

, : தமிழ­கத்  