சினேகாவை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் யார் என்று கேட்பவர்களுக்காக சிறு விளக்கம்.
வழக்கறிஞரான சினேகா இந்திய அளவில், தமக்குச் 'சாதி, மதம் இல்லை' என்று வெளிப்படையாக அறிவித்து, அதை உறுதி செய்வதற்கான சான்றிதழைப் பெற்றவர். இதற்காக அவர் பத்து ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இப்போது 'அவள் அப்படித்தான் 2' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகி உள்ளார் சினேகா.
கடந்த 17 ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில்புரிந்து வருபவர், கல்லூரி மாணவர்கள், சிறார்கள், பெண்கள் மத்தியில் அரசியல், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சினேகா, மனிதன் பிறக்கும்போது சாதி, மதமும் உடன் வருவதில்லை என்கிறார்.
இவரது பெற்றோரும் வழக்கறிஞர்கள்தாம். 'எந்தச் சாதி மதமும் சம்மதம் இல்லை' என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி வளர்த்துள்ளனர்.
"தங்கள் கொள்கைப்படி எனக்கு சினேகா என்றும் என் தங்கைகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர் என்றும் பெயர் சூட்டினர்.
இதுவரையிலான வாழ்க்கையில் நாங்கள் எந்தச் சாதி மதப் பண்டிகைகளையும் கொண்டாடியதில்லை. மூன்று பேரையும் பள்ளியில் சேர்க்கும் போதே சாதி, மதம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லித்தான் சேர்த்தனர்.
"எங்களுடைய திருமணத்தையும் புரட்சிகரமாகத்தான் நடத்தினார்கள். பெற்றோர் வழியைப் பின்பற்றி என்னுடைய மூன்று மகள்களுக்கும் நானும் அப்படித்தான் பெயர் சூட்டி உள்ளேன்," என்கிறார் சினேகா.
சமூகம், அரசியல் சார்ந்து பல தளங்களில் இயங்கி வரும் இவருக்குப் பள்ளிப் பருவத்தி லேயே நாடகங்கள் மீது ஆர்வம் அதிகமாம். தாமே நாடகங்களை எழுதி, இயக்கி நடித்துள்ளார்.
"தமிழ்ப் பேராசிரியரான என் கணவர் முனைவர் பார்த்திப ராஜாவும் ஒரு நாடகவியலாளர். தாம் பணியாற்றும் திருப்பத்தூர் கல்லூரியில 'மாற்று நாடக இயக்கம்' நிறுவி அதன் வழி நிறைய நவீன நாடகங்களை மேடையேற்றி வருகிறார். "நாடகம் தொடர்பான 20 புத்தகங்கள் உள்பட 40 புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்," என்கிறார் சினேகா.
கணவரது ஏற்பாட்டில் நான்கு நாள்கள் நடைபெறும் நாடக விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து சில நாடகக்குழுக்கள் பங்கேற்கும் என்று குறிப்பிடுபவர், அதில் கணவர் எழுதி, இயக்கும் நாடகத்தில் தாமும் பங்கேற்று நடிப்பது வழக்கம் என்கிறார்.
"குறைந்தபட்சம் இருபது முறையாவது அந்த நாடகத்தை அரங்கேற்றுவோம். பிரான்ஸ் நாட்டில் உள்ள அரியநாயகம் ஐயா என்னோட நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்.
"அவள் அப்படித்தான் 2' படத்தின் இயக்குநர் ரா.மு.சிதம்பரம், தனது படத்துக்குக் கதாநாயகியைத் தேடியபோது அரியநாயகம் ஐயாதான் என் பெயரை அவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
"அதன் பிறகு ரா.மு.சிதம்பரம் என்னைத் தொடர்பு கொண்டது, தேடிவந்த வாய்ப்பை நான் ஏற்றது எல்லாம் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இது நல்ல அனுபவம்," என்கிறார் சினேகா.
, :
தமிழகத்
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழிகளில் சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ளார். 'வசந்த மாளிகை' படத்தின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட அவருக்கு 74 வயதாகிறது. இந்நிலையில்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் வாணிஸ்ரீக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி உள்ளது.
நாட்டுப்புறப் பாடகர் அந்தோணிதாசன் இதற்கு முன்பு திரைப்படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டி உள்ளார். இப்போது முதன் முறையாக 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருவதாகச் சொல்கிறார் அந்தோணி தாசன்.

