'அழகான பொம்மையைப் போல் இருப்பார் பிரியா'

'அழகான பொம்மையைப் போல் இருப்பார் பிரியா'

3 mins read
2f816803-29c3-4579-a6ab-3888ac9b4148
-

இயக்­கு­ந­ரா­கத் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி பின்­னர் கதா­நா­ய­கன், வில்­லன் எனப் பல்­வேறு வகை­யி­லும் ரசி­கர்­க­ளைக் கவர்ந்து வரு­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

அதி­லும் இவர் வில்­ல­னாக நடித்­தால் படம் நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும் என்ற அள­வுக்கு உத்­த­ர­வாத நடி­க­ரா­கப் பெய­ரெ­டுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்­டி­யில் தமது திரை­யு­லக அனு­ப­வங்­கள் குறித்து விலா­வா­ரி­யா­கப் பேசி­யுள்­ளார் எஸ்.ஜே.சூர்யா.

பிரியா பவானி சங்­க­ரு­டன் இவர் இணைந்து நடித்­துள்ள 'பொம்மை' படம் உல­கெங்­கும் நாளை வெளி­யீடு காண்­கிறது. இப்­ப­டத்­தின் நாய­கன் மட்­டு­மல்ல, தயா­ரிப்­பா­ள­ரும் இவர்­தான்.

"திடீ­ரென ஒரு படத்­தைத் தயா­ரிக்க என்ன கார­ணம் என்று கேட்­கி­றார்­கள். இந்­திப் படங்­களில் நடிக்க வேண்­டும் என எனக்கு மிகுந்த ஆசை. ஒரு தமிழ் நடி­கர், நாடு முழு­வ­தும் அறி­யப்­பட்ட பிர­மு­க­ராக இருக்­க­வேண்­டும் என விரும்­பி­னேன். அதற்­கா­கத்­தான் அமி­தாப் பச்­சனை வைத்து சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு 'உயர்ந்த மனி­தன்' படத்­தைத் தொடங்­கி­னேன். ஆனால் எதிர்­பா­ராத வித­மாக அந்­தப் படத்­தைப் பாதி­யில் கைவிட வேண்­டி­ய­தா­யிற்று.

"அதன் பிறகு இந்­தி­யில் நடிக்க வேண்­டும் என்று மன­தில் உறு­தி­யான ஒரு தீர்­மா­னம் தோன்­றி­விட்­டது. எனவே யாரி­டம், எந்­தக் கதை­யைக் கேட்­டா­லும் தமி­ழுக்கு மட்­டு­மல்­லா­மல் இந்­திக்­கும் அது பொருத்­த­மாக இருக்­குமா என்று யோசிப்­பேன்.

அந்த வகை­யில் 'பொம்மை' படத்­தின் கதையை இயக்­கு­நர் ராதா­மோகன் சொல்ல கேட்­ட­போது, அது இந்­தியா முழு­வ­தும் உள்ள அனைத்­துத் தரப்பு ரசி­கர்­க­ளுக்­கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் எனத் தோன்­றி­யது. அத­னால்­தான் அதை நானே தயா­ரிப்­பது என முடிவு செய்­தேன்.

"இந்­தப் படத்தைத் தமி­ழில் வெளி­யிட்ட இரண்டு வாரங்­க­ளுக்­குப் பிறகு தெலுங்­கில் வெளி­யி­ட­லாம். அதன் பிறகு கியாரா அத்­வானி, கிருத்தி சனோன் போன்ற இளம் நாய­கி­களை நடிக்க வைத்து இந்­தி­யி­லும் வெளி­யி­ட­லாம்," என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

இயக்­கு­நர் ராதா­மோ­கன் இவ­ரி­டம் கதை சொல்ல வந்­த­போது, தயா­ரிப்­பா­ளர் ஒரு­வ­ரும் உடன் இருந்­தா­ராம். எனி­னும், தாமே தயா­ரிப்­ப­தா­கக் கூறி­விட்­டார். "இந்­தி­யி­லும் நானே கதா­நா­ய­க­னாக நடிக்க விரும்­பு­கி­றேன். ஆனால் என்னை வைத்துப் பட­மெ­டுக்க வேண்­டிய அவ­சி­யம் அந்­தத் தயா­ரிப்­பா­ள­ருக்கு இல்லை. என­வே­தான் நான் தயா­ரிப்­பா­ள­ரா­கி­விட்­டேன்," என்று சொல்­லும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்­க­ரு­டன் மூன்­றா­வது முறையாக இணைந்து நடிக்க குறிப்­பிட்ட கார­ணம் ஏதும் இல்லை என்­கி­றார்.

"ஏற்­கெ­னவே நானும் அவ­ரும் இணைந்து நடித்த 'மான்ஸ்­டர்' படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. அத­னால் மீண்­டும் அதே ஜோடி இணை­யும்­போது ரசி­கர்­கள் மீண்­டும் ஆத­ரிப்­பார்­கள் எனக் கரு­து­கி­றோம். மேலும், பிரி­யா­வுக்­கும் எனக்­கும் ஒரே மாதி­ரி­யான முகச்­சா­யல் இருப்­ப­தா­கக்கூட சிலர் சொல்ல கேட்­டி­ருக்­கி­றேன். 'பொம்மை' படத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் பிரி­யா­வும் அழ­கான பொம்­மை­யைப் போல் தோற்ற­ம­ளிப்­பார். அது­மட்­டு­மல்ல, சில கோணங்­களில் பார்க்­கும்­போது பிரி­யா­வுக்கு நடிகை சிம்­ர­னின் சாய­லும் உண்டு. நான் ஏற்­கெ­னவே சிம்­ர­னு­ட­னும் இணைந்து பணி­யாற்றி உள்­ளேன். அத­னால் பிரி­யா­வு­டன் இணைந்து நடிக்­கும்­போது எனக்கு மட்­டு­மல்ல, ரசி­கர்­க­ளுக்­கும் ஏற்­கெ­னவே இந்த ஜோடியைத் திரை­யில் பார்த்­த­து­போன்று இருக்­கிறது.

"பிரியா தற்­போது தீவி­ர­மாக உடற்­பயிற்சி மேற்­கொண்டு, உடல் எடை­யைக் குறைத்து வரு­கி­றார். ஏற்­கெ­னவே இருக்­கும் அழகை ஏன் குறைத்­துக்கொள்­கி­றீர்­கள் என்று அவ­ரி­டம் அறி­வு­றுத்­தப் போகி­றேன்," என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா. பிரி­யா­வுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்­டும் என நீங்­கள் சிபா­ரிசு செய்­வது உண்­மை­தானா என்று கேட்டபோது, "அப்­ப­டிச் செய்ய வேண்­டிய அவ­சி­யமே இல்லை. அவ­ருக்­கான வாய்ப்­பு­களை தனது திற­மை­யால் பெற்று வரு­கி­றார். 'பொம்மை' படத்­தி­லும்­கூட அவரை முத­லில் தேர்வு செய்ய­வில்லை. முத­லில் வேறு சில நாய­கி­க­ளி­டம்­தான் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னோம். அதன் பிறகே பிரி­யாவை ஒப்­பந்­தம் செய்­தோம்," என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

படங்கள், செய்திகள்: ஊடகங்கள்