நீத்து சந்திரா: ஆக்‌ஷன் படங்களில் நடிக்கவே விருப்பம்

நீத்து சந்திரா: ஆக்‌ஷன் படங்களில் நடிக்கவே விருப்பம்

2 mins read
7ca2093c-bf2d-4ba5-bc0f-87aaa19d696d
-

துர்கா கரு­ணா­நிதி

தமி­ழில் 2009ஆம் ஆண்­டில் வெளி­யான 'யாவ­ரும் நலம்' படத்­தில் மாத­வ­னுக்கு ஜோடி­யாக நடித்து பிர­ப­ல­மா­ன­வர் நீத்து சந்­திரா.

தீராத விளை­யாட்டுப் பிள்ளை, யுத்­தம் செய், ஆதி­ப­க­வன், சேட்டை, தில­கர், வைகை எக்ஸ்­பி­ரஸ் உள்­ளிட்ட படங்­க­ளி­லும் நடித்து இருக்­கி­றார். சிங்­கம் 3 திரைப்­ப­டத்­தில் சூர்­யா­வு­டன் ஒரு பாட­லில் நட­ன­மா­டி­யுள்­ளார்.

பீகாரைச் சேர்ந்த நீத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்­னட, ஆங்­கில, போஜ்­புரி, கிரேக்கம், மராட்டி ஆகிய மொழித் திரைப்­ப­டங்­களில் நடித்­துள்­ளார். அது­மட்­டு­மல்­லா­மல், இவர் இம்­மொ­ழி­கள் அனைத்­தை­யும் நன்கு தெரிந்துவைத்­துள்­ளார்.

வேலை கார­ணமாக சிங்­கப்­பூ­ருக்கு வருகை புரிந்­தி­ருந்த நீத்து தனது திரை­யு­ல­கக் கன­வு­க­ளை­யும் லட்­சி­யங்­க­ளை­யும் தமிழ் முரசுடன் பகிர்ந்­து­கொண்­டார்.

"நான் 13 தேசிய விரு­து­கள் பெற்­ற­வர்­களு­டன் பணி­யாற்றி இருக்­கி­றேன். இது­வரை அமி­தாப்­ பச்­சன், அக்­‌ஷய் குமார், ஜான் ஆப்­ர­ஹாம் ஆகி­ய­வர்­க­ளு­டன் நடித்­துள்ள நான் ரஜி­னி­காந்த், விஜய், அஜித் ஆகிய நடி­கர்­க­ளு­டன் நடிக்க விரும்புகிறேன்," என்­றார் நீத்து.

அண்­மை­யில் 'நெவர் பேக் டவுன்: ரிவோல்ட்' என்ற திரைப்­ப­டத்­தில் ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ர­த்தில் நடித்து ஹாலி­வுட் உல­கில் அடி­யெ­டுத்து வைத்­தார் நீத்து.

சிறு வய­தி­லி­ருந்து தெக்­வாண்டோ தற்­காப்­புக் கலை கற்­று­வ­ரும் நீத்­து­வுக்கு இந்த ஆக்­‌ஷன் திரைப்­ப­டத்­தின் கதா­பாத்­தி­ரம் நன்கு பொருந்­தி­யது.

"கதைக்கு முக்­கி­ய­மாக விளங்­கு­வ­தோடு கதை­யில் ஒரு திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கதா­பாத்­தி­ரங்­க­ளையே ஏற்று நடிக்க வேண்­டும் என ஆசைப்­ப­டு­கி­றேன்," என்­றார் நீத்து.

அண்­மை­யில், அபு­தா­பி­யில் தனது தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் அனைத்­து­ல­கப் பிரிவை அவர் தொடங்­கி­னார். இதன் மூலம் உலகளாவிய நிலையில் திரையுலகில் அடியெடுத்துவைத்துள்ளார்.

அவர் தயா­ரித்து அவ­ரது சகோ­த­ர­ரான நித்­தின் சந்­திரா இயக்­கிய 'மிதில்லா மக்­கான்' என்ற திரைப்­ப­டம் தேசிய விருது வென்­றது.

நீத்து தயா­ரிப்­பி­லும் நித்­தின் இயக்­கத்­தி­லும் 'தெஸ்வா' என்ற திரைப்­ப­ட­மும் வெளி­வந்­தது. 'தெஸ்வா' என்ற திரைப்­ப­டம் 37 அனைத்துலகத் திரைப்­பட விழாக்­களில் நிய­மிக்­கப்­பட்­டது. அவ­ரது தயா­ரிப்­பில் வெளி­வ­ரும் திரைப்­ப­டங்­க­ளின் மூலம் பல­ருக்கு வேலை வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்தி கொடுப்­ப­தற்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றார் நீத்து. ஹாலி­வுட் துறை­யில் நுழைந்த இவர் இனப் பாகு­பாட்டை எதிர்­கொண்­டார். அதே நேரம், திறந்த கரங்­க­ளு­டன் தன்னை வர­வேற்­ற­வர்­களும் இருந்­த­னர் எனப் பகிர்ந்­து­கொண்­டார்.

"எனது அடை­யா­ளத்தை இழக்­கா­மல் தொடர்ந்து இந்­திய திரைப்­ப­டங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன். அது­மட்­டு­மல்­லா­மல், குறிப்­பாக போஜ்­புரி திரைப்­ப­டங்­கள் தயா­ரிப்­ப­தி­லும் நான் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்," என்று நீத்து கூறி­னார்.

"பழ­மை­யான மொழி­களில் ஒன்­றா­னது தமிழ்மொழி. செழு­மை­யான மர­பும் கலா­சா­ர­மும் கூட தமிழ் திரைப்­ப­டங்­களில் என்­றுமே இருப்­ப­துண்டு. அப்­ப­டிப்­பட்ட தமிழ் மொழி­யி­லான திரைப்­ப­டங்­களில் நடிப்­பதை நான் ஒவ்­வொரு முறை­யும் ஒரு புதிய கற்­றல் அனு­ப­வ­மாக உணர்ந்­துள்­ளேன்," என்று நீத்து கூறி­னார்.

இரண்டு ஹாலி­வுட், ஒரு கொரிய, ஒரு மலை­யாள, இரண்டு இந்தி திரைப்­ப­டங்­களில் நடித்து வரு­கி­றார் நீத்து.

கூடிய விரை­வில் இவர் நடித்­துள்ள 'ஒன்2ஒன்' என்ற ஒரு தமிழ் திரைப்­ப­ட­மும் கூட வெளி­யா­க­வுள்­ளது.