மடோன்: இது மாவீரன் கதை

மடோன்: இது மாவீரன் கதை

3 mins read
eb49832f-6d7a-417f-92d6-e9b92e61245f
-

'மண்­டேலா' படத்­தின் இயக்­கு­நர் மடோன் அஸ்­வின், அடுத்து 'மாவீ­ரன்' படத்­துக்­காக சிவ­கார்த்­தி­கே­யனு­டன் கைகோத்­துள்­ளார். அறி­மு­கப் படத்­தி­லேயே தேசிய விரு­தைப் பெற்ற வகை­யில் மடோன் அஸ்வின் குறித்த எதிர்­பார்ப்பு தமிழ்த் திரை­யு­ல­கில் அதி­க­ரித்­துள்­ளது.

"'மண்­டேலா' படம் வெளி­யா­ன­தும் தயா­ரிப்­பா­ளர் அருண் விஸ்வா என்­னைத் தொடர்­பு­கொண்டு பேசி­னார். அப்­போது சிவ­கார்த்­தி­கே­யன் அந்­தப் படத்தை மிக­வும் ரசித்­துப் பார்த்­த­தாகக் கூறி­ய­போது மகிழ்ச்­சி­யாக இருந்­தது.

"அருண் பேசி முடித்த சில நிமி­டங்­களில் சிவா கைப்­பே­சி­யில் அழைத்­தார். 'மண்­டேலா' படத்­தில் தாம் ரசித்த அம்­சங்­கள், காட்­சி­கள் குறித்து அவர் விரி­வாக விவ­ரித்­த­போது, அவ­ரது பாராட்டு வெறும் வார்த்­தை­கள் மட்­டு­மல்ல என்­ப­தும் ஒரு கலை­ஞ­னின் உண்­மை­யான விமர்­ச­னம் என்­ப­தும் புரிந்­தது. அவ­ரது பாராட்­டில் உண்மை இருப்­பதை உணர்ந்­த­போது பெரு­மி­த­மா­க­வும் இருந்­தது," என்­கிறார் மடோன் அஸ்­வின்.

அந்த உரை­யா­ட­லின்­போது இரு­வ­ரும் இணைந்­துப் பணி­யாற்­ற­லாமா? என்று சிவா கேட்க, அதற்கு மடோன் அஸ்வின் நன்றி தெரி­விக்க, அடுத்த நொடியே 'மாவீ­ரன்' படத்­துக்கு இரு­வ­ரும் தயா­ரா­கி­விட்­ட­னர்.

அதன் பிறகு தாம் ஏற்­கெ­னவே தயார் நிலை­யில் வைத்­தி­ருந்த மூன்று கதைகளை ஒதுக்கி வைத்­து­விட்டு, சிவ­கார்த்தி­கே­யனுக்­காக புதுக் கதையை உரு­வாக்­கி­உள்­ளார் மடோன்.

'மண்­டேலா' படத்­தில் மிக எளிய மனி­தர்­க­ளின் வாழ்­வில் நுழைந்து, அவர்­க­ளின் சில நல்ல கணங்­களை எடுத்­துக்காட்டி பாராட்டு பெற்ற அவர், இம்­முறை அதி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்ட கதைக்­க­ளத்­து­டன் கள­மி­றங்கி உள்­ளார்.

'மாவீ­ரன்' என்ற தலைப்­பைக் கேட்­ட­தும் சண்­டைக் காட்­சி­கள் நிறைந்த பட­மாக இருக்­குமோ என்ற எண்­ணம் ரசி­கர்­க­ளுக்­கு ஏற்­ப­டக்­கூ­டும். ஆனால் இதில் அடி­த­டி­கள் இருக்­குமே தவிர, முழு­நீள சண்­டைப் படம் என்று வகைப்­ப­டுத்­தி­விட முடி­யாது என்­கி­றார் இயக்­கு­நர்.

"இந்­தப் பட­மும் கற்­ப­னைக் கதை­தான். ஆனால், கதை நடக்­கும் கள­மும் அதில் இடம்­பெற்­றுள்ள கதா­பாத்­தி­ரங்­களும் மிக யதார்த்­த­மா­னவையாக இருக்­கும்.

"நமது அண்டை வீட்­டில் வசிக்­கும் ஒரு பைய­னின் வாழ்க்கை­யில் நாம் ஆச்­ச­ரி­யப்­படும் வகை­யில் திடீ­ரென்று சில சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தால் எப்­படி இருக்­கும் என்று யோசித்­துப் பாருங்­கள். அது­தான் 'மாவீ­ரன்' படம்.

"அவரது தோற்றம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என விரும்பினோம். 'தளபதி' படத்தில் ரஜினி நீளமான தலைமுடி வைத்திருப்பார். அது சிவாவுக்கும் பொருத்தமாக இருந்தது. அதேபோல் படத்தலைப்பு குறித்து யோசித்தபோது, ரஜினி சார் ஏற்கெனவே நடித்திருந்த 'மாவீரன்' படம் நினைவுக்கு வந்தது. அதனால் அதைத் தேர்வு செய்தோம்.

"படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஏன் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தோம் என்பது புரிந்துவிடும். கதையோடு சம்பந்தப்பட்டதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. சிவாவுக்கான கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது, கதைக்கு பொருத்தமாக எழுத வேண்டும் தமக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவை இல்லை என்றும் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

"எனது படத்­தின் கதா­நா­ய­கன் என்­ப­தற்­கா­கச் சொல்­ல­வில்லை. உண்­மை­யா­கவே சிவா மிக­வும் அரு­மை­யான நடி­கர். வணி­கப் படங்­களை அதி­கம் தேர்வு செய்து நடித்து வரு­கி­றார் என்­றா­லும், அவ­ரால் கன­மான கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் கையாள முடி­யும். உணர்­வு­பூர்­வ ­மான நடிப்­பி­லும் நம்­மைக் கவர்­கி­றார்," என்று பாராட்­டு­கி­றார் மடோன் அஸ்­வின்.

படத்­தின் திரைக்­கதை, காட்சி அமைப்பு தொடர்­பா­க­வும் சிவா சில ஆலோ­ச­னை­களை வழங்­கி­னா­ராம். அவை தமக்கு வெகு­வா­கக் கைகொ­டுத்­த­தா­கச் சொல்­கி­றார். படத்­தின் நாயகி அதிதி சங்­க­ருக்­கும் தனி­யா­கப் பாராட்­டுப் பத்­தி­ரம் வாசிக்­கி­றார் மடோன்.

"அதிதிக்கு தாம் பெரிய இயக்குநரின் மகள் என்கிற நினைப்பே கிடையாது. எல்லாரிடமும் மிக இயல்பாக, நட்பாகப் பேசிப் பழகுகிறார். நாயகி என்பதையும் மீறி அவரது கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

"படப்­பி­டிப்­பின்­போது அதிதி இருந்­தால் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் உற்­சா­க­மாக இருக்­கும். எந்­நே­ர­மும் குதூ­க­லம், கொண்­டாட்­டம் என்று வலம் வரு­வார். அவ­ரது நகைச்­சு­வைப் பேச்­சும் அன்­பான போக்­கும் முதல் சந்­திப்­பி­லேயே நம்­மைக் கவ­ரும்.

ஆனால் கேம­ரா­வுக்கு முன் வந்து நின்­றால், அனைத்­தை­யும் மூட்­டைக் கட்டி வைத்­து­விட்டு, நாம் சொல்­வ­தைப் புரிந்­து­கொண்டு, கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­வி­டு­வார்," என்­கி­றார் மடோன்.

, : தமி­ழ­கத்  