'ஒவ்வொரு தண்டட்டிக்குள்ளும் ஒரு மூதாட்டியின் கதை ஒளிந்துள்ளது'

'ஒவ்வொரு தண்டட்டிக்குள்ளும் ஒரு மூதாட்டியின் கதை ஒளிந்துள்ளது'

2 mins read
21cc92c3-23e6-408a-9a6c-330add37abf7
-

சுய­ந­லத்­து­டன் வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளைப் பற்­றிய பதி­வாகி உரு­வாகி உள்­ளது 'தண்­டட்டி' திரைப்­ப­டம்.

அறி­முக இயக்­கு­நர் ராம் சங்கையா இயக்­கும் இப்­ப­டத்­தில் பசு­பதி நாய­க­னாக நடித்­துள்­ளார். ரோகிணி, முகேஷ் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

மேலும், படப்­பி­டிப்பு நடை­பெற்ற ஊரைச் சேர்ந்த சில­ரையும் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளா­ராம்.

"நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் சமூ­கம் குறித்து எழும் ஏராள­மான கேள்­வி­க­ளுக்கு நம்­மி­டம் பதில்­கள் இல்லை. நம்­மி­டம் உள்ள அறப்பண்­பு­க­ளைக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தொலைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.

"நம்­மைப் பெற்­றெ­டுத்த தாய் தந்­தை­ய­ரை­விட பணம்தான் முக்­கி­யம் என்று அலை­கி­றோம். அவ்­வ­ளவு ஏன், பணத்­துக்­கா­க­வும் சொத்­துக்­கா­க­வும் ஆசைப்­பட்டு, தாய் தந்­தை­யைக் கொலை செய்­யும் சமூ­கத்­தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

"அப்­ப­டிப்­பட்ட சுய­ந­ல­வா­தி­களைப் பற்றி யதார்த்­தம் கலந்த நகைச்­சு­வை­யு­டன் இப்­ப­டத்­தில் பதிவு செய்­துள்­ளேன். அதேசமயம் மன­தைக் கலங்­க­டிக்­கும் அம்­சங்­களும் இருக்­கும்," என்­கி­றார் ராம் சங்­கையா.

தமி­ழக கிரா­மப்­பு­றங்­களில் உள்ள மூதாட்­டி­கள் தண்­டட்டி அணி­வது வழக்­கம். தங்­க­ளின் பாரம்­ப­ரி­யத்­தை­யும் பெரு­மை­யை­யும் வெளிப்­ப­டுத்த தண்­டட்டி உத­வும் என்­பது அவர்­க­ளு­டைய அசைக்க முடி­யாத நம்­பிக்கை.

தங்­கப்­பொண்ணு என்ற மூதாட்­டி­யின் ஒட்­டு­மொத்த வாழ்க்­கை­தான் 'தண்­டட்டி'

திரைப்­ப­டம்.

"சிறு வயதில் என் வீட்டுக்கு அருகில் தங்கப்பொண்ணு என்ற மூதாட்டி இருந்தார். அவரை எப்போதும் வம்புக்கு இழுப்போம். அவரும் எங்களை ஏசுவார்.

"ஒரு­முறை ''ஏய் கெழவி... என்­றா­வது ஒரு­நாள் உன் காதில் உள்ள தண்­டட்­டியை அறுத்­து­விடு­வோம் பார்' என்று விளை­யாட்­டாக மிரட்­டப்­போக, அன்று முதல் அந்­தக் கெழவி தன் வீட்டு வாச­லில் உள்ள திண்­ணை­யில் படுப்­ப­பதை நிறுத்­தி­விட்­டார்.

"எங்கே நாங்­கள் அந்த தண்டட்­டியை அறுத்துக் கொண்டு போய்­வி­டு­வோம் என்று அவ­ருக்கு அவ்­வ­ளவு பயம். அந்த அள­வுக்கு என்­பது எங்­கள் வாழ்க்­கை­யில் கலந்­து­விட்ட விஷ­யம்.

"அம்­மூ­தாட்­டி­யின் கடை­சிக்­கா­லத்­தில் அவர்­பட்ட சிர­மங்­கள் என் மனதைப் பாதித்­தது. அவர் அணிந்­தி­ருந்த 'தண்­டட்டி'க்கா­கத்­தான் அவரை வீட்­டில் வைத்­தி­ருந்­த­னர். அந்தத் தண்­டட்­டியை யார் பெறு­வது என்­ப­தில் பிள்­ளை­கள் மத்­தி­யில் போட்டி.

"இப்­படி ஒவ்­வொரு மூதாட்­டி­யின் தண்­டட்­டிக்­குள்­ளும் ஒவ்­வொரு கதை இருக்­கிறது. இது எனக்­குள்ளே பெரிய வலியை ஏற்­படுத்­தி­யது. அடுத்த பத்து, பதி­னைந்து ஆண்­டு­களில் தண்­டட்டி இருக்­காது. அத­னால்­தான் இந்த விஷ­யத்தை எனது முதல் படத்­தி­லேயே பதிவு செய்­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் ராம் சங்­கையா.

படத்­தில் நடி­கர் பசு­பதி தலை­மைக் காவ­ல­ரா­க­வும் கிரா­மத்து மூதாட்­டி­யாக ரோகி­ணி­யும் நடித்­துள்­ள­னர். தங்­கப்­பொண்ணு கதா­பாத்­தி­ரம் இறந்­த­பி­றகு அவ­ரது தண்­டட்டி காணா­மல் போகிறது. அதைக் கண்­டு­பி­டிக்க வரு­கி­றார் பசு­பதி. எந்­தக் கார­ணத்­துக்­காகவும் ஊருக்­குள் காவல்­துறையை அனு­ம­திக்­காத கிராமத்­துக்­குள் நுழைந்து பசு­பதி அந்த தண்­டட்­டி­யைக் கண்­டு­பிடித்­தாரா என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.