சங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பாக இருந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் அந்தக் கதை தாம் எழுதியது எனக் குறிப்பிட்டு நீதிமன்றத்தை அணுகினார். இதை இயக்குநர் சங்கர் தரப்பு மறுத்தது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கு விசாரணையின் முடிவில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் கதைக்கும் 'எந்திரன்' படத்தின் கதைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் செலவை மனுதாரர் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

