தொழிலில் கால்பதிக்கும் நயன்தாரா

தமிழ்ச் சினிமாவின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என பாசத்தோடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா இனி சினிமாவை நம்பினால் சரிப்பட்டு வராது என புதிய தொழில் தொடங்கும் அதிரடி திட்டத்தில் களம் இறங்கியுள்ளார் .

இதன் காரணமாக நயன்தாரா சினிமாவை விட்டு விலக இருப்பதாக கோலிவுட் திரையுலகில் சிலர் பேசி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து ‘வில்லு’ படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் முடிந்தது.

இந்த இரண்டு காதல் முறிவுகளையும் வைத்து நயன்தாராவை தனிப்பட்ட முறையில் பலர் விமர் சித்தனர். ஆனால், நயன் அவற்றை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது நடிப்புத் தொழிலைத் தொடர்ந்து வந்தார்.

இப்படி ஒருபக்கம் சினிமா, மறுபக்கம் தொழில் என இரண்டிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக சில திரையுலகப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாரா இப்போது தமிழில் தனது 75வது படத்திலும் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்திலும் நடித்துவருகிறார்.

இந்தச் சூழலில் அவரும் விக்னேஷ் சிவனும் இணைந்து வடசென்னையில் இருக்கும் ‘அகஸ்தியா’ திரையரங்கை வாங்கி உள்ளனர் என்றும் அதனை இடித்துவிட்டு புதிய கடைத்தொகுதி ஒன்றை கட்ட உள்ளனர் என்றும் அண்மையில் தகவல் வெளியானது.

ஆனால் இத்தகவல் வதந்தி என அகஸ்தியா திரையரங்க நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

இதனிடையே, நயன்தாரா சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை புதிய தொழிலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துவருகிறார்.

அந்தவகையில் அவர் ‘லிப் பாம்’ பொருளின் மொத்த விநியோகிப்பாளராகவும் வீட்டு அழகு சாதனப் பொருள்களை இணையம் வழி வியாபாரம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் அவர் இப்போது ஒரு புதிய தொழில் ஒன்றையும் கேரளாவில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தகவலின்படி, நயன்தாரா ஏற்கெனவே கேரளாவில் பல இடங்களை வாங்கி சொத்து சார்ந்த தொழில் செய்து வருகிறார்.

அப்படி அவர் வாங்கி வைத்திருக்கும் இடத்தில் சகல வசதிகளும் கொண்ட பல அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்புகளைக் கட்டி அவற்றை வாடகைக்கு விட முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த யோசனையை விக்னேஷ் சிவன் நயனுக்கு கொடுத்ததாகவும் எனவே இந்தத் தொழிலில் பல கோடி ரூபாயை அவர் முதலீடு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களை வளர்ப்பதில் நயன்தாரா கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்.

எனவே அவர் படிப்படியாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவருகிறார்.

அதன் காரணமாகத்தான் சினிமாவைவிட தொழில் தொடங்குவதில் அதீத அக்கறை எடுத்துவருகிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ச் சினிமாவில் கடந்த 18 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வருகின்றார் நயன்தாரா. தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த நயன்தாரா, தற்போது சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. மேலும் தன் கணவர் விக்னேஷ் சிவனுக்கும் அஜித்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவிப் போனது.

அதேபோல், நயன்தாராவிற்கும் ஒரு சில படவாய்ப்புகள் கைநழுவிப் போன நிலையில், சினிமாவை மட்டும் நம்பினால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்துள்ள நயன்தாரா புதுப்புது தொழில்கள் பக்கமும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே சில தொழில்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா, தற்போது பல கோடி முதலீட்டுடன் கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி அதனை விற்பனை செய்யும் தொழிலைத் துவங்கியுள்ளார். இதனை விக்னேஷ் சிவன் மேற்பார்வை செய்து வருகின்றார்.

இதில், அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கம் போல் பணம் புரளும் என்றும் அவரது இந்தத் தொழிலை அடுத்தடுத்து விரிவுபடுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!