காஜல் அகர்வால் சிவனின் தீவிர பக்தை என்பதால் தன் மகனுக்கு ‘நீல்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், “நான் சிவபெருமானை எப்போதும் வணங்கி வருகிறேன். என் குழந்தைகளுக்கு சிவபெருமானின் பெயரை வைக்க வேண்டும் என்று முன்னரே முடிவு செய்து விட்டேன். அழைப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதாக இருக்கும் வகையில் மகனுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று கணவர் யோசனை தெரிவித்தார். அதனால் நீலகண்டன் என்கிற சிவபெருமானின் பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்துக்கொண்டு என் மகனுக்கு ‘நீல்’ என்று பெயர் வைத்தேன்,” என்றார் காஜல்.


