பிரபல பாடகி அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசையுலகில் தனி முத்திரை பதித்துள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும் பாடி உள்ளார். கடைசியாக ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் பாடியிருந்தார். இந்நிலையில், தனக்கு விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
“நான் சிறு வயது முதல் நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகை. அவர் பெற்ற விருதை நானும் பெறப்போகிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் அருணா சாய்ராம்.


