அனைவரும் முதலில் தங்களுடைய ஆன்மாவுக்காக வாழ வேண்டும் என்கிறார் சமந்தா.
சமூகம் நம்மைப் புரிந்து கொள்ளாமல் போக வாய்ப்புண்டு என்றும் அதே தவற்றை நாம் செய்துவிடக்கூடாது என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கூட்டத்தோடு ஒருவராக இல்லாமல் உங்களுக்காக நீங்கள் நிற்பது எப்போதுமே சிறந்த விஷயம். நீங்கள் இந்த உலகத்திற்காக வாழ வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் மதிப்பை நீங்கள் உணர வேண்டும். நம்மை நாம்தான் உயர்த்திக்கொள்ள வேண்டும்,” என்கிறார் சமந்தா.
இதையடுத்து அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

