கர்மா தன் வேலையைக் காட்டும் என்று சமூக ஊடகத்தில் ஷ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ளது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
கர்மாவின் விளையாட்டைப் பார்க்கப் போகிறீர்கள் என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, அவற்றில் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
“நாம் நமது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும்,” என்று ஷ்ருதி மேலும் தெரிவித்துள்ளார்.
யாரை கர்மா தாக்கும், எதற்காக இந்தப் பதிவு என்பது குறித்து ஷ்ருதி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
தெலுங்கில் ‘ஹாய் நானா’ என்ற படத்திலும் ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷ்ருதி.


