‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர்.
மஞ்சு வாரியர், அனகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கோடம்பாக்கத்துக்குப் புதிதாக வந்துள்ள திபு நினன் இசையமைக்கிறார்.
ஆர்யாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கௌதம் கார்த்திக்கும் இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவாராம்.
படத்துக்கான பூசை சென்னையில் நடைபெற்றது. அன்றைய தினமே படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர். முதலில் ஆர்யா தனியாக நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.


