திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பதற்கான தனது முன்னாள் கணவரான இயக்குநர் செல்வராகவனுக்கும் தமக்கும் மட்டுமே தெரியும் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
தனது காதல் செத்துப்போய்விட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் இனி என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராகப் பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.
“செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை. மிக அமைதியானவர். எப்போதும் கதை வசனம் எழுதிக்கொண்டு பரபரப்பாக இருப்பார்,” என்று சோனியா அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.
தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டிருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


