காதல் தோல்வி காரணமாகவே திரையுலகில் இருந்து தாம் சில காலம் விலகி இருந்ததாக நடிகை கிரண் கூறியுள்ளார்.
தாம் எடுத்த தவறான முடிவால் வாழ்க்கை நாசமாகிப்போனது என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஒருவரை தீவிரமாகக் காதலித்தேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனேன்.
“இப்போது நடிக்க விரும்புகிறேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. புதிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்,” என்று கிரண் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் இவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விக்ரம் நடிக்கும் புதுப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
விக்ரமுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஜெமினி’யில் கிரண்தான் கதாநாயகி. அச்சமயம் இளையர்களின் கனவுக்கன்னியாக இருந்தார் கிரண். தமிழில் கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.

