சத்தமின்றி தமது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. படத்துக்கு ‘ஈகை’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். அசோக் வேலாயுதம் இயக்குகிறார்.
இதில் தாய்லாந்து கொரில்லாவுடன் நடித்துள்ளாராம் அஞ்சலி.
“இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்போதுதான் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
“பல முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கினோம். அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
“எப்படி கொரில்லாவுடன் பயமின்றி நடித்தேன் என்பதை நினைத்தால் எனக்கே வியப்பாக உள்ளது. எப்படியோ படம் சிறப்பான படைப்பாக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி,” என்கிறார் அஞ்சலி.


