நடிகை சமந்தாவுக்கு அழகு சாதனப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா.
அழகு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார் நயன்தாரா.
இந்நிலையில், தனது நெருங்கிய தோழிகளில் ஒருவரான சமந்தாவுக்கு தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை நயன்தாரா அன்புப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அவற்றை தாம் பெற்றுக்கொண்டதாகவும் விரைவில் அவற்றைப் பயன்படுத்த ஆவலாக இருப்பதாகவும் சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும், நயன்தாராவுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தபோது, இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.

