‘ஆர்வன்’ என்ற படத்தில் ஜி.பி.முத்து திருநங்கையாக நடிக்கிறார்.
டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.
நாளுக்கு நாள் இவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டிவிட்டது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து பெரிய திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கியுள்ளார்.
தற்பொழுது இவர் ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது. இந்த சுவரொட்டியை ஜி.பி.முத்து தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

