மடோனா: ரகசியம் காக்க வேண்டும் என்றனர்

‘லியோ’ படத்தில் நடிப்பது குறித்து யாரிடமும் விவரம் தெரிவிக்கக் கூடாது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டிப்புடன் கூறியதாகச் சொல்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

‘லியோ’ படத்தில் நடிப்பது குறித்து இவரது நெருக்கமான நண்பர்களுக்கே விவரம் ஏதும் தெரியாதாம். தனது தாயாரிடம் மட்டுமே இதுகுறித்து பேசியதாகக் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் திடீரென திரையில் தோன்றி அசத்தினார் சூர்யா. அவர் நடித்த அந்த ஒருசில நிமிடங்களுக்கு ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

விக்ரம் படத்தில் இடம்பெற்ற அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் பட வெளியீட்டுக்கு சில நாள்கள் முன்புதான் வெளியே கசிந்தது. பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உறுதியானது.

அதே வழியைப் பின்பற்றி ‘லியோ’ படத்தில் மடோனா நடிக்கும் தகவலும் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டுள்ளது படக்குழு.

“இந்தப் படத்தில் நடிப்பது குறித்து என் அம்மாவுக்கு மட்டுமே தெரியும். நெருக்கமான நண்பர்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்ட தகவலை வைத்து என்னிடம் விசாரித்தபோதுகூட வாய் திறக்கவில்லை.

“எப்படியும் இசை வெளியீட்டு விழா நடக்கும்போது இந்தத் தகவல் வெளிவரும் அதன் பிறகு வெளிப்படையாகப் பேசலாம் என்று காத்திருந்தேன்.

“ஆனால் அந்த விழாவும் நடக்காததால், படம் வெளியாகும் வரை யாருக்குமே நான் ‘லியோ’ படத்தில் நடித்திருப்பபது தெரியாமல் போனது,” என்று மடோனா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் அணுகியபோது கதை குறித்தோ, தமது கதாபாத்திரம் குறித்தோ எந்த விவரமும் கேட்கவில்லையாம் மடோனா.

விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்று மட்டுமே அவர் கூறினாராம். அதன் பிறகு தற்காப்புக் கலையைக் கற்க வேண்டும் என்று லோகேஷ் கேட்டுக்கொண்டதால் அதற்கென நேரம் ஒதுக்கியதாகச் சொல்கிறார்.

“ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் மாஸ்டர்களிடம் பயிற்சி பெற்றேன். எப்படியோ, நான் சற்றும் எதிர்பாராதவிதமாக விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்து, அதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டேன்,” என்று மடோனா செபாஸ்டியன் அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது ‘விக்ரம்’ பட வெளியீட்டுக்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் இவரை ‘லியோ’ படத்திற்காக ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தெரிகிறது.

அப்படியானால் விஜய்க்கு அடுத்தபடியாக ‘லியோ’ படத்தில் ஒப்பந்தமானது மடோனா செபாஸ்டியனாகத்தான் இருக்கும் என்றும் இறுதிவரை இந்தத் தகவலை கசியவிடாமல் பார்த்துக்கொண்ட அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனவும் விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே ‘லியோ’ கதையிலும் காட்சி அமைப்பிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்யுமாறு படத்தின் தயாரிப்புத் தரப்பு வலியுறுத்தியதாகவும் இதனால் இயக்குநர் லோகேஷ் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

“படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து விமர்சகர்கள், தேவையற்றவை என விமர்சித்துள்ளனர். அதற்கு தயாரிப்புத் தரப்பின் குறுக்கீடுகளே காரணம்,” என விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!