தமிழில் குடும்பப் பாங்கான, கவர்ச்சியற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தெலுங்கில் மட்டும் குறை வைக்கவில்லையாம்.
அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள இரண்டு தெலுங்குப் படங்களில் அவர் மிக கவர்ச்சியாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் விமான நிலையம் ஒன்றில் நடிகை விஜய்யை சந்தித்துள்ளார் பிரியா.
இந்த எதிர்பாராத சந்திப்பின்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தாராம். அதைக் கேட்ட விஜய், புன்னகையோடு ‘பார்க்கலாம்’ என்று கூறிச்சென்றதாகத் தகவல்.

