‘விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் அர்த்தமற்றது’

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். அவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘தக்லைப்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மணிரத்னம் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்.

“ஒரு படம் இயக்கும்போது, சில காட்சிகள் பலவீனமாக இருப்பது நமக்கு தெரிந்துவிடும். ஆனால் எல்லாமே கற்றுக்கொள்வதற்குதான் என்று நினைக்க வேண்டும். ஒரு படத்தில் விட்டதை, அடுத்த படத்தில் நிறைவாக கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்,” என்று மணிரத்னம் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் விமர்சனம், கருத்துக்களை கூறமுடியும். ஆனால் இப்போது எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே சமூக ஊடகங்களில் உலா வருகின்றன என்றார் அவர்.

தென்மாவட்டங்களில் படத்தின் வசூலை யாரும் பார்ப்பதில்லை, கதையை பற்றிதான் யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்கிறேன். ஆனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சண்டை போடுவது பார்க்க கஷ்டமாக இருக்கிறது என்று மணிரத்னம் கூறினார்.

அஜித், விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்கள், எனக்கு அஜித்தான் பிடிக்கும், எனக்கு விஜய்தான் பிடிக்கும் என்று சண்டை போடுவது அர்த்தமற்றது. சமூக ஊடகங்களில் நல்ல கேள்விகளை எழுப்பும் பட்சத்தில் பல நல்லது நடக்கும். அதை பலரும் செய்வதில்லை என்பதுதான் வேதனை’‘, என்று மணிரத்னம் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!