வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்து விக்ரமன் அசோகன் என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார் வெற்றிமாறன்.
இப்படத்தில் நயன்தாரா, ‘பிக்பாஸ்’ கவின் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.