தெலுங்கில் அறிமுகப் படத்திலேயே இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நாயகியாகி உள்ளார் மானசா சௌத்ரி. அவரது அறிமுகப் படமான ‘பபில்கம்’ பிற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளதாம்.
இந்நிலையில், தமிழில் முன்னணி நாயகனுடன் ஒப்பந்தமாகி உள்ளார் மானசா. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
“என்னை தமிழ்ப் பெண் என்று தயக்கமின்றிக் குறிப்பிடலாம். ஏனெனில் நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்,” என்கிறார் மானசா.

