நடிகை வரலட்சுமிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என்றும் திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமியும் அவரது வருங்கால கணவரும் 14 ஆண்டுகால நண்பர்கள் எனக் கூறப்படுகிறது.
வரலட்சுமிக்கு திரையுலகத்தினர் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.