போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வி உதயகுமார்

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வி உதயகுமார்

1 mins read
2db60446-f5b1-4371-bb0f-37eac14e4ecc
ஆர்.வி.உதயகுமார். - படம்: ஊடகம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடாததால் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் உள்ள சங்கங்களில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை நீண்ட காலமாக இருக்கும் முக்கியமான சங்கங்கள்.

தற்போதுள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆனால், தேர்தலுக்கு முன்பே சில முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியின்றி தேர்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. தலைவராக ஆர்.வி. உதயகுமார், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. துணைத் தலைவர், துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே நடைபெற உள்ளது.

இதுவரை தலைவராக இருந்து வந்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி அடுத்த நிர்வாகத்திற்கு போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டாராம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்