தேவி ஸ்ரீ பிரசாத்தை சந்தித்த இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சென்னையில் புதிதாக ஒலிப்பதிவுக் கூடத்தை தொடங்கியுள்ளார். அந்தக் கூடத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று பார்வையிட்டார்.

அந்த சந்திப்பு குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“இளையராஜா இசையையும் என்னையும் பிரிக்க முடியாது, சிறு வயது முதலே இசைஞானி இளையராஜாவின் இசை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நான் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் இளையராஜாவின் இசைதான்,” என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.

“நான் இசையமைப்பாளராக மாறியபின் எனது சொந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை வைத்தேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது இப்போது நடந்துள்ளது. இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.

தன்னைப் பார்க்க வந்ததற்கு இளையராஜாவுக்கு நன்றி என்றும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!