தன்னை யாராவது சந்திக்க விரும்பினால், ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், “புதியவர்களுக்கு உதவி செய்வதற்காக நிறைய நேரத்தை வீணடித்துள்ளேன். பெரும்பாலும் அவையனைத்தும் முட்டாள் தனத்துடன் முடிந்துள்ளது. அதனால் தன்னை படைப்பாற்றல் மிகுந்த மேதைகளாக நினைத்துக்கொள்ளும் நபர்களை சந்திப்பதில் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, இனிமேல் என்னை சந்திப்பதற்கான தொகையை நிர்ணயித்துள்ளேன்.
“யாராவது என்னை 10-15 நிமிடங்கள் சந்திக்க விரும்பினால், ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். அரைமணி நேரத்துக்கு ரூ.2 லட்சமும் 1 மணி நேரத்துக்கு ரூ.5 லட்சமும் செலுத்த வேண்டும். மக்களை சந்திப்பதில் நேரத்தை வீணடித்து சோர்வடைந்துள்ளேன். இந்தத் தொகையை உங்களால் செலுத்த முடியும் என்று நினைத்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது தூர விலகி நில்லுங்கள்,” என்று அறிவித்துள்ளார்.