நடிகை அஞ்சலி அண்மையில் சிவப்பு புடவையில் எடுத்த புகைப் படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சில காலமாக திரையில் காணாமல் போயிருந்த அஞ்சலி தற்பொழுது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் இயக்குகிறார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் ‘எப்படி இருந்தவர் இப்படி அழகாக இருக்கிறாரே!’ என்று பதிவிடப்பட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.