படம் தயாரிப்பதை விட்டுவிடுங்கள் என்று மகன் கூறியதைக் கேட்டு படத் தயாரிப்பைக் கைவிட்டுள்ளார் டி.ராஜேந்தர்.
ஒரு பாடல் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.ராஜேந்தரைத் தேடி நிறைய வாய்ப்புகள் அவர் வீட்டுக்கதவைத் தட்டுகின்றன. பலவற்றை ஒத்துக்கொண்டாலும் டி.ஆர்., இடையே ஒரு படம் தயாரிக்கிற திட்டத்தில் இருந்தார். ஆனால், ``இப்போது அந்தப் படத்தைத் தொடர வேண்டாம். உடம்பை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்,’’ என்று மகன் சிம்பு கறாராக சொல்லிவிட, மறுபேச்சின்றி படம் தயாரிப்பதை கைவிட்டு விட்டார் டி.ராஜேந்தர்.

