‘கில்லி’ மறுவெளியீடு: முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் பெறலாம்

சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரலில் பெரிய அளவிலான தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு காணாத நிலையில், திரைப்பட இயக்குநர்களும் விநியோகஸ்தர்களும் பழைய வெற்றிப் படங்களை மறுவெளியீடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தரணி இயக்கத்தில் 2004ல் வெளியான விஜய்யின் ‘கில்லி’, 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக சனிக்கிழமை (ஏப்ரல் 20) திரையரங்குகளில் மறுவெளியீடு கண்டது.

ஆக அண்மைய அறிக்கைகளின்படி, ‘கில்லி’ மறுவெளியீடு கண்ட முதல் நாளில் உலகம் முழுவதும் அது ஏறக்குறைய ரூ.10 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாகவே அத்திரைப்படம் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்து வந்தது.

‘கில்லி’யின் மறுவெளியீடு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர்ஹிட் பாடல்களான ‘அர்ஜுனர் வில்லு’ மற்றும் ‘அப்பாடி போடு’ பாடல்களுக்கு திரையரங்குகளில் தாங்கள் நடனமாடுவதைக் காட்டும் காணொளிகளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

‘கில்லி’யின் மறுவெளியீட்டுக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பால் அப்படத்தில் நடித்த திரிஷா மகிழ்ச்சியில் திளைத்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி நன்றி. நீங்கள் எனக்கு அனுப்பும் அற்புதமான பதிவுகள், காணொளிகளுக்கு மிக்க நன்றி,” எனப் பதிவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!