குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன், திடீரெனக் கவர்ச்சிப் பாதைக்கு மாறியதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழில் ‘கொடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனுபமா, தெலுங்கில் ‘டில்லு ஸ்கோயர்’ படத்தில் நடித்தார்.
அப்படத்தில் படுக்கை அறை, முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நடிக்க அனுபமா சிறிதும் தயங்கவில்லை என்றும் முத்தக்காட்சிகளில் நடிக்க அதிக ஊதியம் பெற்றார் என்றும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லாக்டவுன்’ என்ற படத்தில் அனுபமாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது. இதில் தாராளமாக கவர்ச்சி காட்ட அனுபமா கூடுதல் ஊதியம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சமூக ஊடகங்களில் அவரைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.