இந்தித் திரையுலகில் எப்படியாவது நல்ல பெயர் வாங்கி மும்பையிலேயே நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என்பதுதான் ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனனின் கனவாம்.
தற்போது ‘யுத்ரா’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். மீண்டும் இந்தியிலேயே நடிக்க சில கதைகளைக் கேட்டு வருகிறாராம்.
தமிழைவிட அதிக ஊதியம், பெரிய வர்த்தக வலைப்பின்னல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு போன்ற கவர்ச்சி அம்சங்கள்தான் மாளவிகாவை இவ்வாறு பேச வைத்திருப்பதாகச் சொல்கின்றனர் பாலிவுட் விவரப்புள்ளிகள்.
மேலும், சர்ச்சைக்குரிய கதை, பாத்திரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார் மாளவிகா.