‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’.
இதில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இதுவரை அவர் பெற்றிராத தொகையை ஊதியமாக நிர்ணயித்துள்ளனராம். இதனால் கதை கேட்காமலேயே அவர் நடிக்கச் சம்மதித்துவிட்டாராம்.
தற்போது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் கியாரா.
இதற்கிடையே, ‘டாக்சிக்’ படத்தில் நாயகனின் சகோதரியாக நடிக்கக் கேட்டு அப்படக்குழுவினர் நயன்தாராவை அணுகியுள்ளதாகத் தகவல்.

