“ஆண்களை நம்புவதைவிட பயங்கரமானது வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’‘ என்று சமூக ஊடகத்தில் ஒருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார்.
மேலும், ராஷ்மிகா, ரன்பீர் நடித்துள்ள அனிமல் படத்தின் ஒரு காட்சியையும் அந்த ரசிகர் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், ஆண்களில் நிறைய பேர் நல்லவர்களாக உள்ளனர் என்றும் அத்தகையவர்களை நம்ப வேண்டியது மிக அவசியம் என்றும் ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டாள்களை நம்புவதுதான் பயங்கரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

