‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு, தமிழில் நடிக்காமல் இருந்தார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யாவின் 44வது படத்தின் நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்துக்காக தனது ஊதியத்தை உயர்த்தியுள்ளாராம் பூஜா ஹெக்டே. இதுவரை ரூ.3.50 கோடி சம்பளம் பெற்று வந்த அவர், இப்போது சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் ஐந்து விரல்களைக் காண்பிக்கிறாராம். அவர் கேட்ட தொகையை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
‘சூர்யா 44’ படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

