சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சௌத்திரி நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூன்றாம் பாகம் ‘டிடி ரிடர்ன்ஸ்’ என்ற தலைப்பில் வெளியானது.
இந்நிலையில் ‘டிடி ரிடர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தனியாக உருவாகிறது. இதில்தான் மீனாட்சி சௌத்திரியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி சௌத்திரி.