இளையராஜாவின் அடுத்த இசை நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அவர் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
அதில், தமது இசை நிகழ்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் உள்ள தலை சிறந்த இசைக் கலைஞர்கள் தனது குழுவோடு இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இளையராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

