ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து நாள்தோறும் மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து இயக்க இருந்த படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்புதிய படத்தில் சல்மான்கான் இன்னொரு நாயகனாக நடிப்பதாகவும் தெரி கிறது. இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாம்.

