‘அனிமல்’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி அடுத்து ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நாயகனாக நடிக்கும் பிரபாஸ், காவல்துறை அதிகாரி வேடத்தை ஏற்றுள்ளார்.
மொத்தம் ரூ.300 கோடி செலவில் இப்படம் உருவாகும் நிலையில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளார்.
ஏற்கெனவே சந்தீப் ரெட்டி இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.
அந்த நட்பின் அடிப்படையில் கதையைக்கூட கேட்காமல் சந்தீப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

