ரஜினியின் ‘கூலி’ படத்தை முடித்த கையோடு, ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்தி நாயகனாக நடித்த ‘கைதி’ படம் வெளியானது.
‘கைதி’ திரைப் படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்திருந்தனர்.
எனினும், வேறு சில பெரிய படங்களை இயக்குவதில் லோகேஷ் கவனம் செலுத்தியதால் ‘கைதி 2’ படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘கைதி’ இரண்டாம் பாகம் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தரப்பு கூறி வருகிறது.