நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான ‘வேட்டையன்’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இதன் குரல் பதிவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகை துஷாரா விஜயன் ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“ரஜினி சாருடன் நடிக்க இருக்கும்போது, அதற்கு முந்தைய நாள் எனக்கு காய்ச்சலேவரும் போல் ஆகிவிட்டது, அவருடன் இணைந்து நடித்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது. மேலும் இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது, பகத் பாசில் போன்ற சிறந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எனக்கு ‘வேட்டையன்’ படம் கொடுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.

