12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் நடிக்கும் சுகன்யா

12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் நடிக்கும் சுகன்யா

1 mins read
1f935b3a-d60c-4605-a7fd-8b1443bc0fa5
நடிகை சுகன்யா. - படம்: ஐஎம்டிபி.காம்

தமிழில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, 90களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா.

கடந்த 15 வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிப்பதைப் பெருமளவில் குறைத்துக் கொண்டாலும், கதைக் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில், ஏறக்குறைய 12 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாளத் திரையுலகில் சுகன்யா கால் பதித்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வரவு’ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தமது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்தத் திரைப்படத்தில் ‘டெய்சி’ என்ற கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்துள்ளார்.

ஏற்கெனவே, தமிழில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான ‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படத்திலும் சுகன்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வகையில், தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் மலையாளத்தில் இணைந்துள்ளது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்