‘ரெட்ரோ’ பட வேலைகளை முடித்த கையோடு, அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் சூர்யா.
இந்நிலையில், அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்குச் சென்று வந்துள்ளனர் சூர்யா, ஜோதிகா தம்பதியர். காமாக்யா கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுமாம்.
இதையடுத்து, கோவிலில் விளக்கேற்றி வழிபட்ட இருவரும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்ததோடு தனது அடுத்த படத்தைத் தொடங்க உள்ளதாக ஜோதிகாவும் குறிப்பிட்டுள்ளார்.